ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து மிகவும் புகழ்பெற்றவர். தற்போது சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல், சினிமா, தொலைக்காட்சி தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது மகன்கள் ஆசிக் மற்றும் ஷாருக்கின் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
அந்த பதிவில் ஒருவர் 'உங்க ஆத்துக்காரர் இந்து தானே. ஏன் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு கூட இந்து பெயர் வைக்கவில்லை' என்று கேட்டார். அதற்கு பாத்திமா, ஒரு இந்துவ நிக்காஹ் தான் பண்ணிக்கிட்டேன். அதுவும் பள்ளி வாசல்ல. ஸோ பொத்திட்டு போ என்பது போல் பதிலளித்தார். இதனால் மிரண்டு போன அந்த நபர் , 'இது பொதுமேடை நான் எதுவும் தவறா கேட்கல' என்று சொல்ல. அதற்கும் பாத்திமா பாபு, 'பொதுமேடைல என்ன ப்ராண்ட் காண்டம் யூஸ் பண்ணறீங்கன்னு கூட கேப்பீங்களோ?' என காட்டமாக பதிவிட்டார். இதனையடுத்து அந்த நபர் பிரச்னை வேண்டாமென அப்படியே விட்டுவிட்டார்.