குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

சின்னத்திரை நடிகையான வீணா வெங்கடேஷ் பல ஹிட் சீரியல்களில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கொரோனா காலக்கட்டத்தில் லீவ் கேட்டதற்காக சித்தி-2 மற்றும் காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்களிலிருந்து நீக்கப்பட்டார். இதனை இன்ஸ்டாகிராமிலும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். அதன்பின் மீனாட்சி கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களாக சுஜாதா என்ற நடிகை நடித்து வந்தார். அண்மையில் அவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து இனி யார் மீனாட்சி? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த வேளையில் ஏற்கனவே நடித்து விலகிய மீனாட்சி கதாபாத்திரத்திலேயே வீணா வெங்கடேஷ் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்திலேயே அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.