ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
இரட்டை சகோதரிகளான அருணா மற்றும் அகிலாவை அவரது பாட்டி தான் கோயில்களில் நடக்கும் இசை வகுப்புகளில் சேர்ந்துள்ளார். அதன்பின் படிப்படியாக இசையை கற்றுக்கொண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருணா, தனது திறமையால் இறுதிபோட்டிக்கும் தேர்வானார். பானை செய்யும் குடும்பத்தை சேர்ந்த அவர் ஒருமுறை எபிசோடில் பேசிய போது கோயில்களில் பாடச் செல்லும் போது தாங்கள் சந்திக்கும் சாதிய ரீதியான அழுத்தங்கள் குறித்து சோகத்துடன் கூறியிருந்தார். இன்று அதேமேடையில் டைட்டில் பட்டம் வென்றதுடன், சூப்பர் சிங்கர் வரலாற்றிலேயே டைட்டில் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் அருணா படைத்துள்ளார். இசைக்கு சாதி, மதம் கிடையாது என்பதை சாதி வெறியர்கள் தலையில் ஆணி அடித்தது போல் சாதித்து காட்டிய அருணாவுக்கு மக்கள் பெரும்பாலானோர் தங்கள் அன்புகளை பகிர்ந்து வருகின்றனர். இசை மட்டுமல்லாது பாடல் வரிகளும் எழுதும் திறன் கொண்ட அவரை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.