ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
பிக்பாஸ் விக்ரமன் தன்னை காதலித்து பண மோசடி செய்ததாக கிருபா முனுசாமி கூறியதையடுத்து விக்ரமனும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்தார். இருப்பினும் பலர் விக்ரமனுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வந்த நிலையில், தற்போது தனது பக்க விளக்கத்தை விரிவாக பேட்டியாக அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், 'கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நாங்கள் நண்பர்களாக பழகி வந்தோம். அந்த சமயம் நட்பு ரீதியில் நான் அவரிடம் பணம் வாங்கியிருந்தேன். அப்படி வாங்கிய பணத்தையும் என்னிடம் பணம் இருக்கும் போதெல்லாம் திருப்பி கொடுத்துவிட்டேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. சொல்லப்போனால் நான் அவரிடமிருந்து வாங்கியதை விட 50 ஆயிரம் ரூபாய் அதிகமாகத்தான் கொடுத்திருக்கிறேன். அவர்தான் இப்போது எனக்கு காசு தரவேண்டும். எனவே, என்மீது அவர் பணமோசடி புகார் சொல்ல முடியாது.
நான் எமோஷ்னல் டார்ச்சர் செய்ததாக சொல்கிறார். ஆரம்பித்தில் நட்பாக பழகிய அவர் திடீரென வேறுவிதமாக நடந்து கொண்டார். பின் அவர் என்னிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். நான் அப்படியெல்லாம் உங்களுடன் பழகவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனால், அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் பிடிக்கவில்லையென்றால் பிரிந்துவிடலாம் என்று சொன்னார். அதன்பிறகு நான் அவரை விட்டு விலக ஆரம்பித்தேன். இதனால் என் மீது ஏற்பட்ட கோபத்தினால் தான் இப்படியெல்லாம் செய்கிறார்.
நான் வேறு சில பெண்களை ஏமாற்றிவிட்டதாக சொல்கிறார். உண்மையில் கிருபாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் பட்டியல் என்னிடம் இருக்கிறது. அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியில் எதிர்கொள்ள தயாராயிருக்கிறேன். அறம் வெல்லும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.