இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா தான் காதலித்து வந்த அரவிந்த் சேகர் என்பவரை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒருவருடம் மட்டும் ஆகியுள்ள நிலையில் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனையடுத்து செய்தி ஊடகங்களில் பல்வேறு வதந்திகளுடன் செய்தி வெளியாகி வந்தது. இதனால் வருத்தமடைந்த ஸ்ருதி சண்முகம் வதந்திகளை பரப்பாதீர்கள் என வீடியோ மெசேஜ் வெளியிட்டார்.
அதில், 'என் கணவர் கார்டியாக் அரஸ்ட் காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் பாடி பில்டர் அல்ல. அவர் ஒரு சிவில் என்ஜினியர். பாடி பில்டிங்கை பேஷனாக எடுத்துக்கொண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றார். ஆனால், என் கணவர் இறப்பு குறித்து செய்தி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. உங்களுக்கு விவரங்கள் வேண்டுமென்றால் என்னுடைய இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக எதையும் பரப்பாதீர்கள் ' என அந்த வீடியோவில் வேண்டுகோள் வைத்துள்ளார்.