துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சின்னத்திரையில் நம்பர் 1 நடிகையாக வலம் வந்தார் ரச்சிதா மஹாலெட்சுமி. அதன்பின் அவர் கமிட்டான சீரியல்கள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே தடைப்பட்டு நின்றுவிட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்தார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின் ரச்சிதா சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அதுகுறித்தும் எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ரச்சிதா தனது இன்ஸ்டாகிராமில் போலீஸ் உடையணிந்து கெத்தாக போஸ் கொடுத்து 'விரைவில்' என வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்கிறாரா? சீரியலில் நடிக்கிறாரா? என்பது இதுவரை தெரியவில்லை. இருப்பினும் ரச்சிதாவின் கம்பேக் அப்டேட் அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.