தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை நடிகை மீனா வெமூரி. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே 2, இலக்கியா ஆகிய தொடர்களில் ஹீரோயின்களுக்கு அத்தையாக பல கொடுமைகளை செய்து நேயர்களிடம் திட்டையும் வாங்கி வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். காரணம் என்னுடைய கதாபாத்திரம் தான். மீடியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை யாரும் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டதில்லை. போனில் மட்டும் சில அழைப்புகள் வரும். அவர்கள் ஆரம்பிக்கும் போதே நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு வரை உட்கார வைத்து 8 மணிக்கு ஒரு ஷாட் எடுப்பார்கள். அப்போதும் அனுப்பமாட்டார்கள். இரவு 9 மணிக்கு தான் அனுப்புவார்கள். அது ஒன்று தான் கஷ்டமாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எப்போது ஷூட்டிங் முடியும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், ஷூட்டிங் போக போக பழகிவிட்டது' என்று கூறியுள்ளார்.