ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை நடிகை மீனா வெமூரி. பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஈரமான ரோஜாவே 2, இலக்கியா ஆகிய தொடர்களில் ஹீரோயின்களுக்கு அத்தையாக பல கொடுமைகளை செய்து நேயர்களிடம் திட்டையும் வாங்கி வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், 'சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், நிறைய பேர் என்னை திட்டுகிறார்கள். காரணம் என்னுடைய கதாபாத்திரம் தான். மீடியாவிற்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை யாரும் என்னிடம் அட்ஜெஸ்மெண்ட் கேட்டதில்லை. போனில் மட்டும் சில அழைப்புகள் வரும். அவர்கள் ஆரம்பிக்கும் போதே நான் முடியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால், காலை 7 மணிக்கு ஷூட்டிங் சென்றால் இரவு வரை உட்கார வைத்து 8 மணிக்கு ஒரு ஷாட் எடுப்பார்கள். அப்போதும் அனுப்பமாட்டார்கள். இரவு 9 மணிக்கு தான் அனுப்புவார்கள். அது ஒன்று தான் கஷ்டமாக இருக்கும். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எப்போது ஷூட்டிங் முடியும் என்று அவர்களுக்கே தெரியாது. ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும், ஷூட்டிங் போக போக பழகிவிட்டது' என்று கூறியுள்ளார்.