கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீரும் பாவ்னியும் தங்களது காதலை உறுதி செய்தனர். அதிலிருந்து இப்போது வரை இருவரும் ஜோடியாக சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஜோடியாகவும் பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதனையடுத்து இருவரும் எப்போது திருமண செய்தி சொல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்ளுடன் பேசிய பாவ்னி ரெட்டியிடம், ரசிகர் ஒருவர் 'நீங்கள் சிங்கிளா?' என்று கேட்க அதற்கு பாவ்னி ‛ஆம்' என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் ‛எப்போது திருமணம்?' என்று கேட்க ‛நாளை தான். நீ வருகிறாயா அமீர்?' என கேட்டு அவரை டேக் செய்துள்ளார். இன்னுமொரு ரசிகர் 'நீங்களும் அமீரும் காதலிக்கிறீர்களா?' என்று கேட்டதற்கு, ‛அப்படியா?' என ஆச்சரியமாக கேட்டு மீண்டும் அமீரையே டேக் செய்துள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் இருவருக்குமிடையே எதுவும் பிரச்னையா? ப்ரேக்கப் செய்துவிட்டார்களா? என்று கேட்டு வந்தனர். ஆனால், உண்மையில் பாவ்னி ரெட்டி அமீருடன் ப்ரேக்கப் செய்யவில்லை. ரசிகர்களிடம் பொய் சொல்லி விளையாடியிருக்கிறார். கடைசியாக அமீரின் புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்து சிரிப்பது போல் பாவனை செய்துள்ளார்.