சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சீரியல் இயக்குனரான திருசெல்வம் 'எதிர்நீச்சல்' தொடரை இயக்கி வருகிறார். நீண்ட நாள் கழித்து மீண்டும் தரமான சீரியலை எடுத்து வரும் அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மெட்டி ஒலி சீரியல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருசெல்வம், ‛நான் மெட்டி ஒலி சீரியலில் நடித்தது எதிர்பாராதது தான். நான் நடிக்கவில்லை என்று சொல்லியும் திருமுருகன் தான் என்னை நடிக்க வைத்தார். இப்போது மெட்டி ஒலி-2 வரப்போவதாக சொல்கிறார்கள். எனக்கு சந்தோஷம் தான். ஆனால், இதுவரை என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை' என்று கூறியுள்ளார்.