தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலரிடம் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். அதேசமயம் வழக்கின் விசாராணையை ஆறுமாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.