தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை 28 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான விஜயலெட்சுமி தொடர்ந்து சில படங்களில் நடித்து சின்னத்திரை பக்கம் வந்தார். நாயகி, டும் டும் டும் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின் ஜீ தமிழ் சேனலில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்துடன் 1 கோடி ரூபாய் வென்றார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் விஜயலெட்சுமி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் 'நடிகர்கள் எதை சொன்னாலும் நடிகைகள் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் அப்படியில்லை. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறது. ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால் அவர் படுக்கைக்கு வருவார் என அவர்களே எண்ணிக் கொள்கிறார்கள். என்னிடமும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். ஆனால், நான் ஏற்கவில்லை' என்று தனக்கு சினிமாவில் நடந்த அட்ஜெஸ்மெண்ட் சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.