தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சின்னத்திரையில் இனியா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார் நடிகை ப்ரீத்தா ரெட்டி. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் அனுபவித்ததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 'சினிமாவில் ஆடிசனிலும் தேர்வான பிறகு ஒப்பந்தம் கையெழுத்து போடும் போது சில நிபந்தனைகளை வைப்பார்கள். அதனால் அந்த வாய்ப்பே வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கிறேன். சில இயக்குநர்கள் அட்ஜெஸ்மெண்ட் கேட்பார்கள். நடிக்கும் வாய்ப்பிற்காக அதை செய்தே ஆக வேண்டும் என்றால், அதையே தொழிலாக செய்யலாமே?. இதனால் தான் சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்துவிட்டேன். ஆனால், சின்னத்திரையில் இந்த பிரச்னை இல்லவே இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனக்கு அதுபோல் இதுவரை எதுவும் நடக்கவில்லை' என்று கூறியுள்ளார். ப்ரீத்தா தற்போது சின்னத்திரையில் சீரியல்கள் மற்றும் ஷார்ட் பிலிம்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.