வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சந்திரலேகா தொடர் நீண்ட நாட்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த தொடர் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் நிறைவடைந்தது. இந்த 6 ஆண்டிலும் இந்த தொடரில் நடித்த இரண்டு கதாநாயகிகளான ஸ்வேதா பண்டேகரும், நாகஸ்ரீயும் இறுதி வரை மாறவில்லை. அதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், வில்லியாக நடித்த நாகஸ்ரீ தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லியாக அருமையாக நடித்திருந்தார். இந்த தொடர் முடிந்த பிறகு ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், நாகஸ்ரீ கன்னடத்தில் பிசியாக சீரியல் நடித்து வருகிறார். அவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நாகஸ்ரீயை சீக்கிரமே தமிழில் கம்பேக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.