ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ப்ரியங்கா நல்காரி, அந்த சீரியல் முடிந்த பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். ஆனால், சீரியல் தொடங்கி சில மாதங்களில் தனது காதலர் ராகுலை திடிரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக சில நாட்களிலேயே சீரியலை விட்டும் விலகினார். இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியங்கா இனி நடிக்கவே வரமாட்டாரா? என வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு கம்பேக் என ஹேஷ்டேக் போட்டிருந்தார். தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த பூஜையில் ப்ரியங்கா நல்காரியும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்த தொடரில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கிறார்.