இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் என்ற படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் ரேகா நாயர். இவர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில், மாகாபா ஆனந்த், ரோஷினி, நடிகை ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பிரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நவீனா என பலரது பெயருடன் ரேகா நாயரின் பெயரும் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ரேகா நாயரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, என்னை காட்டுப்பகுதிக்குள் போய் இருக்க சொன்னாலும் கூட இருப்பேன், ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டும் ஒரு நாளும் போக மாட்டேன். இப்படி நூறு நாட்கள் ஒரு வீட்டுக்குள் போய் இருப்பதற்கு பதிலாக 100 மரங்களை நடலாம் என்று கூறி இருக்கும் ரேகா நாயர், கடந்த மூன்று பிக் பாஸ் சீசன்களின்போதும் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக இப்படிதான் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் துளியும் ஆர்வமில்லை என்று கூறி இருக்கிறார் ரேகா நாயர்.