ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல நடிகரான அபிஷேக் சங்கர் சினிமா மற்றும் சீரியல்களில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கோலங்கள் மற்றும் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அண்மையில் இவர் அளித்துள்ள பேட்டியில் தனது நிஜ வாழ்வின் நடந்த சுவாரசியமான காதல் கதை குறித்து கூறியுள்ளார்.
மோகமுள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அபிஷேக் சங்கர் அன்றைய காலக்கட்டத்தில் படம் ரிலீஸாவதற்கு முன் தினக்கூலி வேலை பார்த்து வந்தாராம். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும் பணியில் இருந்த அவர் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். சம்பளம் வாங்கியவுடன் தேவி தியட்டேரில் படம் பார்த்துவிட்டு மீதமிருக்கும் 47 ரூபாய் மற்றும் சில்லரையை சேர்த்து வைத்துக் கொள்வாராம்.
அபிஷேக் சங்கரின் மனைவி பெரிய பணக்கார வீட்டு பெண். அவர் மும்பையில் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் அவருடன் டெலிபோனில் பேசவே சேர்த்து வைத்திருந்த காசையெல்லாம் அபிஷேக் செலவு செய்துவிடுவாராம். ஆனாலும் அந்த ஒரு நாளுக்காகவே அவர் காத்திருப்பாராம்.