தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டார். ஆரம்பத்தில் கல்வி குறித்து அவர் பேசிய கருத்துகள், விசித்ராவுடன் அவர் மோதியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அமைதியாவிட்டார். எதிலும் ஈடுபாடுகாட்டாததால் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் பிக்பாஸில் வெளியேற்றப்பட்டது குறித்து ஜோவிகா தனது சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். நான் இறுதிப் போட்டியாளராக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும், எனக்காக வழியனுப்பியவர்களுக்கும் இந்த கடிதம்.
என் அம்மாவிடம் திரும்புவதற்கான நேரம் இது என்று நான் உண்மையாக உணர்ந்தேன். அவர்தான் என்னுடைய உலகம். அவரை கவனித்துக் கொள்வதும், பாதுகாப்பதும் எனது கடமை மற்றும் பொறுப்பாகும். கடந்த வாரம் நான் உறுதியாக உணர்ந்த ஒரு விஷயம் என்னவென்றால், நான் விரைவில் வீட்டிற்கு வரவேண்டும் என்பது தான். பிக்பாஸ் வீட்டில் இருந்து இனிமையான நினைவுகள் மற்றும் கற்றல் அனைத்தையும் எப்போதும் என்னுடன் எடுத்துச் செல்வேன்.
எனது அன்பான ஹவுஸ்மேட்கள் அனைவருக்கும் மட்டுமல்லாமல் சிறந்த வீரர் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சியின் போது பேசிய எனது உரிமைகள் மற்றும் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எதற்கும் வருத்தப்படமாட்டேன். எனது செயல்களால் உங்கள் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பேன் என்று நம்புகிறேன். என எழுதியுள்ளார்.