ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே தனிப்பட்ட முறையில் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பாம்பே ஞானம் நடித்து வந்த பட்டம்மாள் (அப்பத்தா) என்கிற முக்கிய கதாபாத்திரம் இறப்பது போல் காட்டி முடிக்கப்பட்டது.
ஏற்கனவே மாரிமுத்துவின் மறைவால் டிஆர்பியில் திண்டாடி வரும் எதிர்நீச்சல் தொடர் முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. புதிய வில்லன்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர். அந்த வரிசையில் ஜனனியின் அப்பத்தாவாக பிரபல நடிகை டி.கே.கலா என்ட்ரி கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
கில்லி படத்தில் பிரகாஷ்ராஜுக்கும், குருவி படத்தில் விஜய்க்கும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் வில்லியாக எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.