வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவி புகழ் ஏற்கனவே விஜயகாந்த் மறைவின் போது அஞ்சலி செலுத்தியிருந்தாலும், அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழ், 'கேப்டன் நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்வார்கள். அவருக்காக நான் என்ன செய்யலாம் என்று நினைத்தேன். எனவே, என்னுடைய ஆபிஸில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்திருக்கிறேன். என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். இதற்காக கேப்டனிடம் ஆசிர்வாதம் வாங்கவே இங்கு வந்தேன்' என்று கூறியுள்ளார். புகழின் இந்த செயலுக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.