தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெயலெட்சுமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறை சார்ந்த பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், 'சமுதாயத்தில் நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் இருக்கிறது. ஒருமுறை வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி என்று எனக்கு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசுகையில் இரண்டு பெண்களின் படத்தை காட்டி பேரம் பேசினார்கள். ஆபாசமாக போட்டோ அனுப்பினால் 2 லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்கிற தவறான எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.