மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் |
சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் டிராப் செய்யப்பட்டதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.