தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவர்களாக தாங்கள் பங்கேற்கவில்லை என செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தனர். அதேசமயம் புதியதோர் நிகழ்ச்சியை தாமுவும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து செய்யப் போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் தாமுவுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ ஒன்றை திடீரென நீக்கியுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தற்போது பதிலடித்த கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ. சொல் தவறினாலும் நட்பு மாறாது' என அழகிய தமிழில் தங்கள் நட்பு உடையவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.