ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவர்களாக தாங்கள் பங்கேற்கவில்லை என செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அறிவித்திருந்தனர். அதேசமயம் புதியதோர் நிகழ்ச்சியை தாமுவும், வெங்கடேஷ் பட்டும் இணைந்து செய்யப் போவதாக தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் தாமுவுடன் சேர்ந்து வெளியிட்ட வீடியோ ஒன்றை திடீரென நீக்கியுள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக பல்வேறு கோணங்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தற்போது பதிலடித்த கொடுத்துள்ள வெங்கடேஷ் பட் 'பூனை கண் மூடினால் உலகம் இருண்டு விடுமோ. இணையத்தில் பதிவை நீக்கினால் உறைத்தது மறையுமோ. சொல் தவறினாலும் நட்பு மாறாது' என அழகிய தமிழில் தங்கள் நட்பு உடையவில்லை என விளக்கம் தெரிவித்துள்ளார்.