தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதை பாராட்டி பேசியுள்ள மதுரை முத்து ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக அந்த வழங்கறிஞர்கள் சங்கத்தினருக்கு நன்றி கூறியுள்ளார். அதேபோல் தமிழக வழக்கறிஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுபோன்ற சம்பவங்களால் வெளிநாட்டில் நாம் எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பெருமை பேசுவோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டியதோடு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.