தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து பலரும் பல்வேறு விதமாக கேட்கிறீர்கள். பலரும் என் சூழ்நிலை பற்றி தெரியாமல் தவறாக புரிந்து கொள்கிறீர்கள். நானும் பப்லுவும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் எதிர்பார்த்தது போல் இருக்கவில்லை. அதனால் இருவரும் பிரிந்திருக்கிறோம். இருவரும் சேர்ந்திருந்தது மகிழ்ச்சியான தருணங்கள். ஆனால், இது பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுங்கள்' என்று கூறியுள்ளார்.