'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆர்த்திகா. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‛‛சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்களால் தான் மற்ற பெண்களையும் அப்படியே நினைத்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள். அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும். அதேபோல் எனக்கு கவர்ச்சியாக உடை அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். இதனால் எனக்கு பணம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை'' என்று கூறியுள்ளார்.