ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் - பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து தற்போது நேஹா மேனன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எனக்கு கிரிக்கெட் பார்க்கக் கூட தெரியாது. யாராவது உடனிருந்தால் பார்த்தால் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் பார்த்த போது பத்திரணா குறித்து அருகில் இருந்தவர் கூறினார். அதன்பிறகு தான் பத்திரணா குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்தேன். இந்த கிசு கிசு அப்போது எனக்கு ஜாலியாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் பத்திரணாவை பார்த்தது கூட கிடையாது' என்று கூறியுள்ளார்.