தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நேஹா மேனன். இவர் சென்ற வருடம் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சென்னை அணியின் வீரரான மகேஷ் பத்திரணாவின் போஸ்ட்டுகளை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதாக சென்ற வருடத்திலேயே செய்திகள் வெளியானது. இந்த வருடமும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் நேஹா மேனன் - பத்திரணா காதல் கதையும் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
இதுகுறித்து தற்போது நேஹா மேனன் மனம் திறந்து விளக்கமளித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டியில், 'எனக்கு கிரிக்கெட் பார்க்கக் கூட தெரியாது. யாராவது உடனிருந்தால் பார்த்தால் பார்ப்பேன். அப்படி ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் பார்த்த போது பத்திரணா குறித்து அருகில் இருந்தவர் கூறினார். அதன்பிறகு தான் பத்திரணா குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்தேன். இந்த கிசு கிசு அப்போது எனக்கு ஜாலியாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் பத்திரணாவை பார்த்தது கூட கிடையாது' என்று கூறியுள்ளார்.