இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'ரெட்டைச்சுழி' படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆரி அர்ஜூனா. அதன்பிறகு மாலை பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா, நெஞ்சுக்கு நீதி உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அலேகா, பகவான், டிஎன் 43 படங்களில் நடித்து வருகிறார். சினிமா தவிர்த்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குறிப்பாக பிக்பாஸ் 4வது சீசனில் பங்கேற்று டைட்டிலும் வென்றார். தற்போது அவர் சின்னத்திரை தொகுப்பாளராகி இருக்கிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'வா தமிழா வா' என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து ஆரி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.