ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தொகுப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வருகிறார். அவருக்கு நார்வேயில் நடைபெற்ற விருது நிகழ்வில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயரிலான விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அந்த விருதினை வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவரான பாலாவிடம் ஒரு தாய் தனது மகனின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை காட்டி சிறுவனது படிப்புக்கு உதவுமாறு கூறினார். அப்போது சற்றும் தாமதிக்காத பாலா தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் கல்விக்கட்டணத்திற்காக கொடுத்துவிட்டு சிறுவனை நன்றாக படிக்குமாறு வாழ்த்தினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பலரும் பாலாவை வள்ளல்களுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.