தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நளதமயந்தி என்கிற சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை பிரியங்கா நல்காரி. முன்னதாக கணவருக்காக சீதாராமன் தொடரிலிருந்து வெளியேறிய அவர், கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்கு பின் நளதமயந்தி சீரியலில் கமிட்டானார். தற்போது கணவருடன் சமாதனம் ஏற்பட்டு அண்மையில் பிரியங்கா தனது பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடினர்.
இதனிடையே நளதமயந்தி தொடரின் கதைக்களம் மாற்றப்பட்டு நடிகை ஸ்ரீநிதி இனி லீட் ரோலில் நடிக்க உள்ளார். தமயந்தி கதாபாத்திரத்தின் தங்கையாக ஸ்ரீநிதி கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமயந்தி கதாபாத்திரமும் இனி தொடராதது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய புரோமோவை நடிகை ஸ்ரீநிதி தனது இண்ஸ்டாகிராமில் பதிவிட பலரும் பிரியங்கா நல்காரி ஏன் சீரியலை விட்டு விலகினார் என்று கேட்டு வருகிறார்கள். இதை பார்த்து ஷாக்கான பிரியங்கா, ‛நான் சீரியலை விட்டு விலகவில்லை. லீவு தான் எடுத்திருக்கிறேன். அடுத்த ஷெட்யூலுக்காக காத்திருக்கும் போது இது எப்படி ஆனது என்று எனக்கே தெரியவில்லை. இதற்கெல்லாம் விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்' என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.