தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வானத்தை போல தொடரில் துளசி கதாபாத்திரத்தில் முதலில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா கெல்கே. தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் கண்ணெதிரே தோன்றினாள் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்வேதா தன்னுடன் கல்லூரியில் படித்த விராந்த் ரஞ்சன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து நேற்றைய தினம் ஸ்வேதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் வைத்து இருவருக்கும் கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது. ஸ்வேதா - விராந்த் ரஞ்சன் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலானது,. ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.