இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செப் வெங்கடேஷ் பட் நீண்ட நாட்களாக நடுவராக இருந்து வந்தார். தற்போது அவர் அந்த சேனலிலிருந்து விலகி வேறொரு தனியார் சேனலில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவர் எதற்காக விஜய் டிவியை விட்டு விலகினார் என்கிற கேள்வியை பலரும் கேட்டு வந்தனர்.
அதற்கு பதிலளித்த வெங்கடேஷ் பட், 'நான் விஜய் டிவியில் தொடர்ந்து 24 வருடங்களாக கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. மீடியா மேஷன்ஸ் நிறுவனத்திற்கும் விஜய் டிவிக்கும் இடையே நடந்த பிரச்னை காரணமாக அவர்கள் சேனலை விட்டு வெளியேறினர். எனக்கு கம்போர்ட் ஷோன் அவர்கள் தான். அதனால் தான் அவர்களுடன் சேர்ந்து நானும் வெளியே வந்தேன். நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை. எனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை' என்று கூறியுள்ளார்.