இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான மதுரை முத்துவின் அப்பா ஊர் நாட்டாமையாக இருந்தவராம். பிரிட்டிஷ்காரர் காலத்தில் முத்துவின் தாத்தாவும் அதன் பிறகு அவரது அப்பாவும் முன்சீப் என்று அழைக்கக் கூடிய ஊர் நாட்டாமை பதவி வகித்துள்ளார்கள். அவரது பேச்சை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 12 கிராமத்துகாரர்களும் தட்டமாட்டார்களாம். இப்படிபட்ட குடும்பத்திலிருந்து வந்த மதுரை முத்துவை, அவரது அப்பா வாத்தியராகவோ, வீஏஓ அதிகாரியாகவோ பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். ஆனால், முத்து காமெடியானாக மாறியது அவரது அப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கூத்தாடி ஆயிட்டியே என்று திட்டிக் கொண்டே இருப்பாராம்.
ஒருமுறை முத்துவின் தந்தை ஊர் பிரச்னைக்காக கலெக்டரிடம் சென்ற போது, கலெக்டர் என் அப்பாவிடம் 'நீங்க மதுரை முத்து அப்பாவா?' என்று கேட்டிருக்கிறார். என் நிகழ்ச்சியை விடாமல் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். அதன்பின் தான் என் அப்பாவுக்கு நானும் ஏதோ உருப்படியாக வாழ்கிறேன் என்று நம்பிக்கை வந்தது. எங்க அப்பா பெரிதாக சொத்து சேர்த்து வைக்கவில்லை என்றாலும் நன்றாக படிக்க வைத்தார். இப்போது நான் பெயர், புகழ், பணம் என்று இருக்கிறேன் என்று சொன்னால் அது என் அப்பா செஞ்ச புண்ணியம் தான் என்று தனது தந்தை குறித்து மதுரை முத்து உருக்கமாக பேசியுள்ளார்.