வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பிரபல நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், சினிமாவிலும் அறிமுகமானார். பிக்பாஸ் என்ட்ரிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அண்மையில் கேப்ரில்லா அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது. ஆனால், புதிதாக பார்ப்பவர்கள் அது நான் தான் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது' என்று கூறியுள்ளார்.