தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சுந்தரி தொடரின் கதாநாயகியான கேப்ரில்லா செல்லஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். இவரை பலரும் ரோல்மாடலாக கொண்டுள்ளனர். பல கல்லூரி மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கின்றனர். இந்நிலையில், இவர் அண்மையில் அவரது சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவு ஒன்றில் 'அனைத்து வன்மங்களையும் அனைத்து பேச்சுகளையும் தாங்கும் பக்குவம் நமது வாழ்க்கையின் அருமை தெரியும்போதே புரியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்க்கும் பலரும் கேப்ரில்லா இவ்வளவு அழுத்தமான கோபமான மெசேஜை யாருக்காக பதிவிட்டிருக்கிறார்? என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிக்க ஆரம்பித்த ஆரம்பகாலக்கட்டத்தில் கருப்பு நிறம், சுமாரான மூஞ்சி என பல காரணங்களுக்காக கேப்ரில்லா விமர்சிக்கப்பட்டார். ஆனால், அந்த தடையெல்லாம் உடைத்து தான் இன்று மக்களின் பிரபலமான நடிகை பட்டியலில் கேப்ரில்லா இடம்பிடித்துள்ளார். இதை குறிப்பிட்டு தான் கேப்ரில்லா இந்த பதிவை போட்டிருப்பார் என ரசிகர்கள் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.