தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இருப்பினும் இந்த தொடர் ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், தொடரின் நாயகன் சமீர் அகமது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசியுள்ளார்.
அப்போது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு காரணம் டிஆர்பியாக கூட இருக்கலாம். கடந்த ஷூட்டிங்கின் போதே சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது. நாங்கள் மனதளவில் அதற்கு தயாராகிவிட்டோம். சில ரசிகர்கள் சீரியல் முடியப் போவதை குறித்து கொஞ்சம் கூட வருத்தப்படவில்லையே என்று கேட்கிறீர்கள். எல்லோருடைய வாழ்விலும் ஒரு திருப்பம் வரத்தான் செய்யும். அது சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சில மாற்றம் வரும் அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்று கூறியுள்ளார்.