ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சின்னத்திரையில் சீரியல்களுக்கு இணையாக ரியாலிட்டி ஷோக்களிலும் செடின்மென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து டிஆர்பியை அள்ளி வருகின்றன தொலைக்காட்சிகள். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ஜீ தமிழ் நிகழ்ச்சியான சரிகமப நிகழ்ச்சியில் சென்ற வாரம் தந்தை - மகள் பாசப்போராட்டம் டிரெண்டான நிலையில், இந்த வாரம் தாய் - மகன் பாசப்போராட்டம் வைரலாகி வருகிறது. மக்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்துள்ள போட்டியாளரான ஆட்டோ ஓட்டுநர் வீரபாண்டி டெடிகேஷன் ரவுண்டில் என்ன பெத்த ஆத்தா என்கிற பாடலை தனது அம்மாவுக்காக பாடி அசத்தினார். அதன்பின் பேசிய அவர், தனது அம்மா தங்களுக்காக ஸ்கூலில் கக்கூஸ் கழுவி ஆயா வேலை பார்த்ததாகவும் இருந்தாலும் தாங்கள் அப்போதெல்லாம் வெகுநாட்கள் பட்டினி கிடந்ததாகவும் மேடையில் கூறினார். மேலும், தனது அம்மா பட்டுப்புடவை கட்டியதே இல்லை என்று கூறிய வீரபாண்டி தன் தாய்க்காக பட்டுப்புடவை வாங்கி கொடுத்தார். இந்த சம்பவத்தை பார்த்து நெகிழ்ந்து போன சைந்தவி, வீரபாண்டியின் அம்மாவை நடுவர்களுக்கு அருகில் அமர செய்து கவுரவப்படுத்தினார்.