இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல சின்னத்திரை நட்சத்திரமான அறந்தாங்கி நிஷா ஏர்போர்ட்டில் வைத்து தனக்கு நடந்த பாடிஷேமிங் அவமானம் குறித்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஏர்போர்ட்டில் நிஷாவிடம் பேசிய நபர் நீங்கள் விஜய் டிவி நிஷாவா என ஆச்சரியத்துடன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு நிஷா ஏன் என்ன ஆச்சு? என்று கேட்க, இவ்வளவு நாளா எப்படி ஏமாந்து போயிருக்கோம். டிவியில உங்கள கலரா காட்டுறாங்க. ஆனா, நீங்க இவ்வளவு கருப்பா இருக்கீங்க என மறுபடி மறுபடி நிஷாவின் நிறத்தை வைத்தே பேசியுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் கருப்பா இருப்பது ஒன்றும் அசிங்கம் இல்லை என சொல்லிவிட்டு நிஷா வந்துவிட்டார்.
அதன்பின் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'உள்ளுக்குள் அதிகம் கோவம் வந்தாலும் அதை வெளிகாட்டவில்லை. அதற்கு காரணம் உணர்வு ரீதியாக யாரையும் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக தான். எவ்வளவோ வளர்ச்சி வந்தாலும் இது போன்ற மக்களின் மனநிலை இன்னும் மாறவில்லை. இவ்வளவு கேவலமான மனநிலையோடு இருப்பவர்களுடன் தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று வருத்தத்துடன் அந்த வீடியோவில் நிஷா பேசியிருக்கிறார்.