இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை பிரபலங்களான அமீத் பார்கவும், ஸ்ரீரஞ்சனியும் சிறந்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு வேதா ஸ்ரீ என்கிற அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில ஊடகங்களில் அமீத் பார்கவின் மகளுக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள அமீத் பார்கவ், 'என் மகளுக்கு ஆட்டிசம், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டோம். அவளுக்கு இருப்பது எக்கோலாலியா. நாம் சொல்கிற சில விஷயங்களை சீக்கிரமாக புரிந்து கொள்ள முடியாது அவ்வளவு தான். மற்றபடி என் மகள் நன்றாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார். இதனையடுத்து வேதா ஸ்ரீக்கு சீக்கிரம் குணமாகிவிடும் என ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் ஆதரவை அமீத் பார்கவ் - ஸ்ரீரஞ்சனிக்கு கூறி வருகின்றனர்.