மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ரேகா கிருஷ்ணப்பா தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும், ஒரு நடிகையாக அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது தெய்வமகள் நெடுந்தொடர் தான். அதில் ரேகா கிருஷ்ணப்பா ஏற்று நடித்திருந்த அண்ணியார் கதாபாத்திரத்தை வைத்து, ரசிகர்கள் இன்றளவும் இவரை திரையில் பார்த்தால் அண்ணியாரே என்று தான் அழைக்கிறார்கள். அதன்பிறகு ரேகா கிருஷ்ணப்பா தமிழில் சில ஹிட் தொடர்களில் நடித்தாலும் தெய்வமகள் அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை. இதனால் சீரியலுக்கு குட் பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமா பக்கம் சென்ற ரேகா, 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டாராம்.
இந்நிலையில், அண்மையில் பேட்டி அளித்த ரேகா கிருஷ்ணப்பா, சீரியலை விட்டு விலகியது ஏன்? என்ற கேள்விக்கு, 'சீரியலில் எனக்கு வரும் கேரக்டர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஒரே மாதிரியாக இருந்தது. அதனால் தான் வேண்டாம் என்று இருந்துவிட்டேன். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க வந்திருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.