ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் சின்னத்திரை விருது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சின்னத்திரை 2023ம் ஆண்டிற்கான விருது விழா அண்மையில் தான் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை எதிர்நீச்சல் தொடர் பெற்றுள்ளது.
இதனையடுத்து விருதை பெற்றுக்கொண்ட இயக்குநர் திருச்செல்வம், 'எல்லோருடைய வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டது தான் எதிர்நீச்சல். கோலங்கள் தொடருக்கு பின் எனக்கு இந்த வாய்ப்பையும், சுதந்திரத்தையும் கொடுத்த தொலைக்காட்சிக்கு நன்றி. இந்த தொடர் இவ்வளவு பெரிய இடத்தை பிடிக்க காரணம் இந்த தொடருக்கு வசனம் எழுதிய ஸ்ரீவித்யா தான்' என கூறினார். அதன்பிறகு தொகுப்பாளர் அர்ச்சனா எதிர்நீச்சல் 2 வருமா? என கேட்க, அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'எதிர்நீச்சல் எப்பொழுதும் வரும், எப்பொழுதும் இருக்கும்' என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.