சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார்.
சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் செய்தித்துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் .
சங்கத்தின் புதிய தலைவர் மங்கை அரிராஜன் பேசும்போது “சின்னத்திரை இயக்குனர்களுக்கான புதிய ஊதிய உயர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இனி சின்னத்திரை தயாரிப்பாளர்கள் இந்த புதிய ஊதிய உயர்வை கொடுக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் இனி சின்னத்திரை சீரியல்களில் பணிபுரியக் கூடாது. சங்கத்தில் உறுப்பினராக உள்ள இயக்குனர்கள் மற்றும் உதவி துணை, இணை இயக்குனர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்” என்றார்.
விழாவில் பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி, தயாரிப்பாளர் எஸ் தானு, நடிகர் எஸ்வி சேகர், திரைப்பட இயக்குனர் சங்க செயலாளர் பேரரசு, கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.