ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். பாக்கியலெட்சுமி தொடரிலிருந்து சில தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய அவர் மீண்டும் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அண்மையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது பூரண குணமடைந்துள்ளார். இதனையடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அவர் குணமடைந்ததை தொடர்ந்து சீக்கிரமே சீரியல் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.