தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி தனக்கு திருமணமான தகவலை வெளியே சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார். தனது கணவர் ராகுலின் பிறந்தநாள் அன்று தான் தனக்கும் ராகுலுக்கும் திருமணமான விஷயத்தையே முதன்முதலாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். ராகுல் - சரண்யா இருவரும் காதலித்து வந்ததும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆனதும் பலருக்கும் தெரிந்திருந்த நிலையில் திருமணத்தை ஏன் யாருக்கும் தெரியாமல் நடத்தினார்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.
இதுகுறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் பதிலளித்த சரண்யா, 'எனது பர்சனல் வாழ்க்கை பர்சனலாக இருக்கட்டும் என்று நினைத்து தான் திருமணமான விஷயத்தை வெளியே சொல்லவில்லை. அது எங்களுக்குள் இருந்தால் போதும். எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து கொள்ள விரும்பவில்லை' என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பதிலுக்கு சிலர் 'அப்புறம் எதுக்கு உங்கள் கணவருக்காக செய்த வரலெட்சுமி பூஜையை சோஷியல் மீடியாவில் பதிவிட்டீர்கள்?' என சுட்டிக்காட்டி கலாய்த்துள்ளனர்.