தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சித்து - ஸ்ரேயா அஞ்சன் தம்பதியினர் மீண்டும் ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ள சீரியல் 'வள்ளியின் வேலன்'. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாக்ஷி சிவா வெளியேறியிருக்கிறார்.
இதற்கு காரணம் என்னவென்றால், சாக்ஷி சிவா தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் குறிப்பிட்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரையே தனக்காக பேச வேண்டும் என்று கண்டிஷன் போடுவாராம். இதற்காக இவர் தரப்பிலிருந்து சில அட்ஜெஸ்மெண்டுகளும் செய்து கொள்வாராம். இப்படியிருக்க இந்த தொடரில் ஆரம்பத்தில் சாக்ஷி சிவாவிற்காக அவர் சொன்ன அதே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையே பேசுவதற்கு புக் செய்துள்ளனர். ஆனால், அவருக்கு சம்பளம் அதிகம் என்பதால் அவரை நீக்கிவிட்டு வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் தான் சாக்ஷி சிவா சீரியலை விட்டு வெளியேறியிருக்கிறார்.