தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடர்களில் ஒன்று மாரி. இந்த தொடரில் ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். ஆரம்பத்தில் நடிகை சோனா மாரி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், திடீரென வெளியேறிவிட்டார்.
அதன்பின் பல பிரபலங்கள் மாறிவிட்ட நிலையில் தற்போது ஹீரோயினாக நடித்து வரும் ஆஷிகா படுகோனும் வெளியேறுவதாக தகவல் கசிந்துள்ளது. ஆஷிகா படுகோனுக்கு சீரியல் குழுவினருடன் எந்தவித பிரச்னையும் இல்லாத போதும் சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் சீரியலை விட்டு விலகுவதாக சக பிரபலங்களிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாரி சீரியலின் அடுத்த கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.