ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சீரியெலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அத்துடன் தொடரின் நாயகன் சதீஷும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி என்கிற பப்ளிக் எக்ஸாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா பெயிலா? என்பது ரசிகர்கள் உங்கள் கையில் தான் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துவிட்டேன். ஆனாலும், தொடர்ந்து முயற்சிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.