வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தெலுங்கு சின்னத்திரையை சேர்ந்த மான்யா ஆனந்த் தமிழில் வானத்தைப் போல தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் ஏற்கனவே நடித்து வந்த ஸ்வேதா விலகியவுடன் அவருக்கு பதிலாக என்ட்ரி கொடுத்த மான்யாவிற்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், போக போக ஸ்வேதாவை விட மான்யா தான் துளசி என்ற கதாபாத்திரத்திற்கு கட்சிதமாக பொருந்தும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார்.
அந்த தொடர் முடிவுக்கு வந்தவுடன் தமிழில் வேறு எந்த சீரியலிலும் அவர் நடிக்கவில்லை. இதனால், ரசிகர்கள் மீண்டும் அவரது என்ட்ரியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படியே மான்யா ஆனந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். யாரடி நீ மோகினி, சூர்யவம்சம் ஆகிய தொடர்களை தயாரித்திருந்த மங் ஸ்டூடியோ நிறுவனம் தான் இந்த புதிய தொடரை தயாரிக்க உள்ளது. மிக விரைவில் இந்த தொடர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.