ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சரிகம நிறுவனம் தயாரித்து, ஒளிபரப்பி வரும் தொடர் ரோஜா. இந்த தொடரில் பிரியங்கா நல்லார், சிபு சூர்யன், ரங்கநாதன், வடிவுக்கரசி உள்பட பலர் நடித்து வருகிறார்கள், பிரின்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் அனு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஷாமிலி சுகுமார் . தற்போது ரோஜா சீரியலில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவே கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோசமான சூழலில் இருந்து தமிழகம் மீள வேண்டும். நான் 26 சீரியல்களில் நடித்து முடித்திருந்த நிலையில் வந்த வாய்ப்புதான் ரோஜா. இதில் நான் நடித்த அனு கேரக்டர் எனக்கு பெஸ்ட் வில்லி விருது வாங்கி தந்தது. ஆனால் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். நடிப்பதற்கு என்னுடைய உடல் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நான் இந்த கொரோனா நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்வதை தவிர்க்க வேண்டி இருக்கிறது. இந்த கொரோனா எனக்கு தெரிந்தவர்களை நிறையவே பாதித்துவிட்டது.
இந்த நேரத்தில் பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. இந்த நிலைமையால் தான் என்னால் நடிக்க முடியவில்லை. இந்த நிலைமை சரி ஆனால் கண்டிப்பாக நடிப்பேன். உண்மையில் நான் கொரோனாவால் பயந்து விட்டேன். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது. மருத்துவர்களும் இந்த நேரத்தில் இப்படியான சூழ்நிலையில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகின்றனர். எனவே ரசிகர்களாகிய நீங்களும் மாஸ்க் போடுங்கள் விழிப்புடன் இருங்கள். மற்றபடி என் கதாப்பாத்திரம் தொடரும் எனக்கு பதிலாக வேறு யாராவது நடிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.