இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சின்னத்திரை பிரபலமான மா கா பா ஆனந்த நல்ல கலைஞன் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பதை அவருடன் பழக வாய்ப்பு கிடைத்த அனைவருமே கூறியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் சிறந்த ஆண் தொகுப்பாளருக்கான விருதை மா கா பா பெற்றார்.
அப்போது விஜய் டிவி சேனல் ஹெட் விருதை வழங்கிவிட்டு, மா கா பா வை பற்றி பேசும் போது, எப்போதுமே தன்னை பிஸியாக வைத்திருக்கும் மா கா பா சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. இது அவரது உடல்நலனுக்கு நல்லதல்ல என்ற தகவலை வருத்தத்துடன் பதிவு செய்தார்.
உதவும் குணம் கொண்ட மா கா பா பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன்னை எப்போதுமே பிஸியாக வைத்திருக்கிறார். பல தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சென்னையில் உணவின்றி தவிக்கும் பல ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் முயற்சியையும் செய்து வருகிறார். சமூகப்பணிகளை செய்வதோடு மட்டுமல்லாமல் அதை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னை போலவே பணி செய்யும் மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதுபோல பல நற்பணிகளை செய்து வரும் மா கா பா வேலை மற்றும் சமூகப்பணிகள் இடையே தன்னை கவனித்துக் கொள்வதில்லை என அவரது நண்பர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.