இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மதன் பாண்டியன் - ரேஷ்மா ஜோடி சின்னத்திரையில் மீண்டும் இணைந்து புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் சீரியலான பூவே பூச்சூடவா தொடரில் நாயகி கதாபாத்திரத்தில் அறிமுகாமானார் ரேஷ்மா. இவர் அதே சீரியலில் நடித்து வரும் மதன் பாண்டியன் என்ற நடிகரை காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று மதனும் ரேஷ்மாவும் தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். ஆறு மாதத்தில் திருமணம் இருக்கலாம் எனவும் அறிவித்திருந்தனர். ஆனால், கோவிட் காரணமாக அவர்களது திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில், புதிய சீரியல் ஒன்றில் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்து வருகின்றனர். கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அபி டெய்லர் என்ற சீரியலில் நாயகனாக மதனும், நாயகியாக ரேஷ்மாவும் நடிக்கின்றனர்.
காதலை வெளியுலகிற்கு அறிவித்த பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் முதல் சீரியல் இதுதான். ரியலிலும் திரையிலும் ஜோடி சேர்ந்துள்ள மதன் ரேஷ்மாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.